For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது

92 வயது பாட்டியை அடித்த 102 வயது தாத்தா அடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த அக்கப் போர் கதையை பாருங்க. 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஒரு முதியோர் இல்லத்தில் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.

[இன்னும் 39 நாள்தான்.. பொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது யார் யார்!]

வாக்குவாதம்

வாக்குவாதம்

சிட்னியில் உள்ள போண்டி கடற்கரைக்கு அருகே ஒரு வயது முதிர்ந்தோருக்கான இல்லம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தின்போது இந்த தாத்தாவுக்கும், பாட்டிக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாத்தா, பாட்டியை அடித்து விட்டாராம்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து தாத்தாவைக் கைது செய்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று விடுவித்தனர். அவர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பாட்டி எப்படி இருக்கிறார்?

பாட்டி எப்படி இருக்கிறார்?

தாத்தா, பாட்டி பெயர்களை போலீஸார் வெளியிடவில்லை.ஏன் சண்டை நடந்தது என்பதையும் வெளியிடவில்லை. பாட்டி என்ன ஆனார், பத்திரமாக இருக்கிறாரா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

இதுதான் முதல் முறை

இதுதான் முதல் முறை

தாத்தா மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருட சிறைத் தண்டனை கிடைக்குமாம். 102 வயதில் அடிதடி வழக்கில் ஒரு தாத்தா கைதாகியிருப்பது ஆஸ்திரேலியாவில் இதுவே முதல் முறை என்று சொல்கிறார்கள்.

English summary
A 102 year old man has been charged for assaulting a 92 year old woman at an old age home in Sydney on Wednesday. The unnamed man will appear in court next month, police said, after he was accused of assaulting the fellow resident at a care facility in the city's eastern suburbs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X