என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது
92 வயது பாட்டியை அடித்த 102 வயது தாத்தா அடித்துள்ளார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த அக்கப் போர் கதையை பாருங்க. 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஒரு முதியோர் இல்லத்தில் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.
[இன்னும் 39 நாள்தான்.. பொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது யார் யார்!]
வாக்குவாதம்
சிட்னியில் உள்ள போண்டி கடற்கரைக்கு அருகே ஒரு வயது முதிர்ந்தோருக்கான இல்லம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தின்போது இந்த தாத்தாவுக்கும், பாட்டிக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாத்தா, பாட்டியை அடித்து விட்டாராம்.
வாக்குமூலம்
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து தாத்தாவைக் கைது செய்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று விடுவித்தனர். அவர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
பாட்டி எப்படி இருக்கிறார்?
தாத்தா, பாட்டி பெயர்களை போலீஸார் வெளியிடவில்லை.ஏன் சண்டை நடந்தது என்பதையும் வெளியிடவில்லை. பாட்டி என்ன ஆனார், பத்திரமாக இருக்கிறாரா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
இதுதான் முதல் முறை
தாத்தா மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருட சிறைத் தண்டனை கிடைக்குமாம். 102 வயதில் அடிதடி வழக்கில் ஒரு தாத்தா கைதாகியிருப்பது ஆஸ்திரேலியாவில் இதுவே முதல் முறை என்று சொல்கிறார்கள்.