For Daily Alerts
Just In
பாக். பெஷாவர் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பெஷாவரின் ஹயதாபாத் பகுதியில் இன்று 800க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் புகுந்த தற்கொலைப் படை தலிபான் தீவிரவாதிகள் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வீசி தாக்குதல்களை நடத்தினர்.
இத் தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 56 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
கடந்த டிசம்பர் 16-ந் தேதி பெஷாவர் பள்ளிக் கூடத்தில் 132 குழந்தைகளை படுகொலை செய்த தாக்குதலை நினைவுபடுத்துவதைப் போல தீவிரவாதிகளின் இன்றைய தாக்குதல் இருந்ததாக கூறப்படுகிறது.
Comments
English summary
At least 13 people were killed and more than 50 injured in a gun and bomb attack in the Hayatabad area Friday when suicide attackers and gunmen entered an imambargah, police and hospital officials said Friday