For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடாவில் இந்திய ரெஸ்டாரண்ட்டில் குண்டு வெடிப்பு.. 15க்கும் மேற்பட்டோர் காயம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டொரான்டோ: கனடா நாட்டிலுள்ள இந்திய ரெஸ்டாரண்ட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கனடா நாட்டின் ஒன்டாரியோ நகரிலுள்ள மிச்சிசாகுவா பகுதியிலுள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் 'பாம்பே பேல்' என்ற பெயரில், இந்திய ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது.

15 injured in blast at Indian restaurant in Canada

இந்த ரெஸ்டாரண்டில் நேற்று இரவு 10.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2 நபர்கள் குண்டு வைத்துவிட்டு கிளம்பி சென்றுள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகப்படும் நபர்களின் உருவ படத்தை சிசிடிவி காட்சிகளை கொண்டு வெளியிட்டுள்ளது காவல்துறை.

காயமடைந்ததில் மூன்று பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொரான்டோவில் கடந்த மாதம், வேன் ஒன்றை மோதச் செய்து ரெஸ்டாரண்டில் 10 பேர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
At least 15 people have been injured in an explosion at an Indian restaurant near Toronto, tweeted police in the Peel regional area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X