இப்படியும் திருமணம்: 42 வயதில் 18 வயது சிறுவனை மணந்த 5 பிள்ளைகளின் தாய்
கோலாலம்பூர்: மலேசியாவில் 18 வயது சிறுவன் 5 மகன்களின் தாயை திருமணம் செய்துள்ளார்.
மலேசியாவில் உள்ள கோலாபென்யூ பகுதியை சேர்ந்தவர் மதலின் உத்தம்(52). அவரின் மகன் முகமது சுஃபி அலின்(18). அலின் 5 மகன்களின்
தாயான தயாங் சோபியா குஸ்தி(42) என்ற பெண்ணை விரும்பி கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டார்.
பியூஃபோர்ட் மாவட்ட மசூதியில் நடந்த திருமணத்தில் இருவீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அலின் சோபியாவின் விரலில்
மோதிரம் போடும்போது எடுத்த புகைப்படம் இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.
இந்த திருமணம் குறித்து மணமகனின் தந்தை கூறுகையில்,
திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் என் மகன் தனது முடிவை என்னிடம் தெரிவித்தார். ஒரு பொறுப்பான கணவனாக இருந்து 5
மகன்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என என் மகனுக்கு அறிவுரை வழங்கினேன்.
என் மகனுக்கு சோபியா தான் மனைவி என அல்லாஹ் முடிவு செய்துள்ளார் என்றார்.