For Daily Alerts
Just In
நைஜீரிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 இந்தியர்கள் விடுவிப்பு- ஒருவர் மரணம்
அம்புஜா: நைஜீரிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களால் கடந்த மாதம் கடத்தப்பட்ட 19 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் பிடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்கா கடற்பரப்பில் கடந்த டிசம்பர் 15-ந் தேதி எம்.டி. டுகே என்ற சரக்கு கப்பலில் பயணித்த 20 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்ல்லப்பட்டனர்.. இதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், கடத்தப்பட்டோரில் 19 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்; ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க உதவிய நைஜீரிய அதிகாரிகளுக்கும் இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
Comments
English summary
19 Indians kidnapped by pirates near Nigerian coast released, 1 died in captivity.
Story first published: Sunday, January 19, 2020, 17:52 [IST]