வானில் நேருக்கு நேர் மோதி கடலில் விழுந்த விமானங்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே கோரம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அருகே, இரண்டு சிறிய ரக விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதத்தில், இரண்டு சிறிய ரக விமானங்களும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், இரு விமானங்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கடலில் துறைமுகம் அருகே விழுந்து மூழ்கி உள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானங்கள் பீச்கிராப்ட் 35 பொனான்சா மற்றும், சிட்டாப்ரியா என்று தெரியவந்துள்ளது. இதில் சிட்டாப்ரியா, சாகச விமானமாகும். டொர்ரான்ஸ் ஏர்போர்ட்டை சேர்ந்தது இந்த விமானம். இவ்விபத்தில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடலுக்குள் சடலங்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.