For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவில் தமிழக மருத்துவ மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி

ரஷ்யாவில் தமிழக மருத்துவ மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ரஷ்யாவில் முதுநிலை மருத்துவம் பயில சென்ற தமிழக மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நவீன். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் ஜெய்வந்த். இருவரும் இளநிலை மருத்துவம் பயின்றுள்ளனர்.

2 TN Medical student drown in sea in Russia

முதுநிலை மருத்துவம் பயில கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதினர். அதில் இருவரும் தேர்ச்சி அடையவில்லை. இதையடுத்து இருவரும் ரஷ்யாவில் முதுகலை மருத்துவம் பயில சேர்ந்தனர்.

இந்நிலையில் இன்று நவீன், ஜெய்வந்த் ஆகியோர் நண்பர்களுடன் ரஷ்யாவில் உள்ள கடலில் குளித்தனர். அப்போது பெரிய ராட்சத அலையில் சிக்கி இருவரும் பலியாகிவிட்டனர்.

அவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
2 Tamilnadu Medical Student who studied in Russia drown in Sea while they take bath. They belongs to Chennai and Tiruvallur districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X