டிரம்ப்பின் காருக்கு முன் மேலாடை இல்லாமல் ஓடி வந்த 2 பெண்கள்.. என்ன காரணம்?!
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இரண்டு பெண்கள் மேலாடையால் இல்லாமல் அவருக்கு முன் ஓடி வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரிஸ்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இரண்டு பெண்கள் மேலாடையால் இல்லாமல் அவருக்கு முன் ஓடி வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முதல் உலகப்போர் நூற்றாண்டு நிறைவு விழா அனுசரிக்கப்படுகிறது. முதல் உலகப்போர் 1918 நவம்பர் 11ம் தேதி முடிவடைந்தது.
இதன் நூறாவது ஆண்டு விழா உலகம் முழுக்க நடக்கிறது. இதற்காக பிரான்சில் பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக தலைவர் கலந்து கொண்டுள்ளனர்
பிரான்சில் நடக்கும் விழாவில் உலகின் முக்கிய 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாரிஸில் உள்ள ஆர்க் டி டிரையோம்ப்பில் இந்த விழா நடக்கிறது.
|
வேகமாக ஓடி வந்தார்
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் இந்த விழாவிற்கு செல்லும் போது அவரின் காரை மறிக்கும் வகையில் பெண் ஒருவர் மேலாடை இல்லமால் ஓடி வந்துள்ளார். அவரை தொடர்ந்து அவருக்கு பின் இன்னொரு பெண்ணும் மேலாடை இல்லாமல் ஓடி வந்தார். இவர்கள் இருவரின் உடலிலும் ''வெல்கம் வார் கிரிமினல்ஸ் - போர் குற்றவாளிகளே வருக (welcome war criminals)'' என்று எழுதப்பட்டு இருந்தது.
யார் இவர்
இவர்கள் இருவரும் பேமென் FEMEN என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். அந்த அமைப்பு பிரான்சின் பெரிய பெண்ணுரிமை அமைப்பு ஆகும். பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்முறை, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை என்று பல விஷயங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருகிறது. அவர்கள்தான் டிரம்ப்பின் வருகைக்கும் எதிர்ப்பு தெரிவித்தது.
கைதும் பாதுகாப்பும்
இந்த நிலையில் அந்த பெண்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இது டிரம்ப்பின் பாதுகாப்பில் பெரிய கேள்விக்குறியை எழுப்பி இருக்கிறது. உலகம் முழுக்க ஆடை இல்லாமல் பெரிய தலைவர்களுக்கு முன் ஓடுவது தற்போது ஒரு போராட்ட முறையாக மாறியுள்ளது. இதனால் அந்த பெண்களுக்கு ஒரு பக்கம் ஆதரவும் குவிந்து வருகிறது.