ரோமில் ஒரு பயங்கரம்.. மெட்ரோ ரயில் நிலைய எஸ்கலேட்டர் விழுந்து 20 பேர் படுகாயம்
ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் செயலிழந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
Recommended Video
ரோம், இத்தாலி: இத்தாலியின் ரோம் நகரில் மெட்ரோ ரயில் நிலைத்தில் எஸ்கலேட்டர் பழுதடைந்து விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் ரஷ்ய நாட்டு கால்பந்து விசிறிகள் ஆவர். பலருக்கு கால்களில் அடிபட்டுள்ளது.
ரிபப்ளிகா மெட்ரோ நிலையத்தில்தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அந்த எஸ்கலேட்டர் திடீரென கீழ் நோக்கி வேகமாக இறங்க ஆரம்பித்தது.
சிறுமியை 6 மாத கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர்.. நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்த அவலம்
அலறிய பயணிகள்
இதனால் அதில் நின்றிருந்தவர்கள் குழப்பமடைந்தனர். பிறகுதான் தெரிந்தது எஸ்கலேட்டர் பழுதடைந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறது என்று. கீழே வேகமாக விழுந்த எஸ்கலேட்டரில் சிக்கி காயமடைந்தவர்கள் காப்பாற்றக் கோரி அலறினர். ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடந்தனர்.
என்ன காரணம்?
இதில் 20 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பலரும் ரஷ்ய நாட்டு கால்பந்து ரசிகர்கள். அவர்களில் பலர் நல்ல குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள்தான் எஸ்கலேட்டரில் பயணித்தபோது தாம் தூம் என்று குதித்து ஆடியுள்ளனர். இதனால்தான் விபத்து நேரிட்டதாக ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால் எஸ்கலேட்டர் பழுது காரணமாகவே விபத்து நடந்ததாக இன்னொரு தகவல் கூறுகிறது.
காயமடைந்தோருக்கு உதவி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோம் மேயர் விர்ஜீனியா ராகி கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து பின்னர் ஆராயப்படும். இப்போதைக்கு காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றார்.
|
லீக் போட்டி தொடக்கம்
விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் கால்பந்து மைதானம் உள்ளது. அங்கு சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. ரோமா மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை பார்க்க ரஷ்ய ரசிகர்கள் வந்தபோதுதான் விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
எலிவேட்டர் வேகமாக செல்வதும், அதிலிருந்து அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழும் வீடியோவும் வைரலாகி வருகிறது.