For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்ஸில் பாலத்தில் இருந்து பஸ் கீழே விழுந்து விபத்து: 21 பேர் பலி, 20 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயணிகள் பேருந்து ஒன்று மேம்பாலத்தில் இருந்து விழுந்து கீழே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது பாய்ந்ததில் 21 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள பாரநாக் நகரில் உள்ள மேம்பாலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று அதிகாலை 5.19 மணிக்கு வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீர் என்று பேருந்து பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்தது. அப்போது பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது பேருந்து விழுந்தது. இதில் வேன் அப்பளமாகிவிட்டது.

இந்த விபத்தில் 21 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.

விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததால் சாலை ஈரமாக இருந்தது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
A passenger bus plunged from an elevated highway in Manila and fell onto a van passing below killing 21 people and injuring 20 others on monday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X