கென்யாவில் பயங்கர தாக்குதல்... மும்பை தாக்குதல் போல் நடந்த சம்பவத்தில் 21 பேர் பலி
Recommended Video
நைரோபி: கென்யாவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் நடத்தப்பட்டது போல், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றன. கென்யா தலைநகர் நைரோபியில் 'டஸ்சிட் டி2' என்ற நட்சத்திர ஒட்டல் அமைந்துள்ளது. இந்த நிலையில், திடீரென ஓட்டலுக்குள் வந்த தீவிரவாதிகள் கண்மூடி தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சில தீவிரவாதிகள் ஓட்டலுக்குள் தாக்குதல் நடத்தினர். இதில், 21 அப்பாவி மக்கள் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் ஓட்டலை சுற்றி வளைத்தனர். இதனால், தாக்குதலை நிறுத்திய தீவிரவாதிகள், நள்ளிரவு 2 மணிக்கு பின்னர் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், 20 மணி நேர சண்டைக்குப் பிறகு ஓட்டலுக்குள் இருந்த தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை, கென்ய அதிபர் உகுரு கென்யட்டா, தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு சோமாலியாவை சேர்ந்த 'அல்சகாப்' என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.