கணவருடன் வீடியோ காலில் இருந்தபோதே தூக்கு போட்டு தற்கொலை செய்த மாடல் அழகி
டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியை சேர்ந்தவர் ரிசிலா பின்டே வாசர்(22). அவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. மாடல் அழகியான ரிசிலா பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் படித்தும் வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை தனது கணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். வீடியோ காலில் இருக்கும்போதே அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு ரிசிலா கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
2012ம் ஆண்டில் இருந்து மாடலாக இருக்கும் ரிசிலாவின் திருமண வாழ்க்கை கசந்துள்ளது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.