For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூர்: போலி சர்ட்டிபிகேட் கொடுத்த 7 இந்தியர் உள்பட 25 வெளிநாட்டினருக்கு சிறை!

By Mathi
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: சிங்கப்பூரில் வேலையில் சேர்வதற்காக போலி கல்வி சான்றிதழ் கொடுத்த 7 இந்தியர்கள் உள்பட 25 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிநாட்டினரின் வேலை நியமனம் குறித்த ஆவணங்களை, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்தது.

அதில் 7 இந்தியர்கள் உள்பட 25 பேர் போலி கல்வி சான்றிதழ்கள் கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

singapore

வழக்கை விசாரித்த நீதிபதி, 22 பேருக்கு 10 வாரம் சிறை தண்டனையும், 2 பேருக்கு 12 வாரம் சிறை தண்டனையும், ஒருவருக்கு 4 வாரம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றவர்களில் 4 பேர் பெண்கள் ஆவர்.

இதுபோன்ற குற்றத்திற்காக 2012ஆம் ஆண்டில் 43 பேரும், 2013ஆம் ஆண்டில் 78 பேரும் தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
25 foreigners have been jailed between four and 12 weeks for submitting bogus educational certificates when applying for jobs here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X