For Quick Alerts
For Daily Alerts
Just In
ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிபர் ஹாசன் ரவுகானி அதிர்ச்சி தகவல்
டெஹ்ரான்: ஈரானில் கொரோனாவால் 2.5 கோடி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹாசன் ரவுகானி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் ஈரான் 11-வது இடத்தில் இருக்கிறது.
ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,71,606 ஆகும். ஈரானில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13,979 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் சமூகப் பரவலாக மாறுகிறது கொரோனா - இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை
Recommended Video
Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்
இந்த நிலையில் ஈரானின் அதிபர் ஹாசன் ரவுகானி தெரிவித்திருக்கும் தகவல் உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஈரான் நாட்டில் மொத்தம் 2.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் 3.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு அபாயம் உள்ளது என கூறியுள்ளார்.
Comments
English summary
Iran's president on Saturday estimated as many as 25 million Iranians could have been infected with the coronavirus.
Story first published: Sunday, July 19, 2020, 13:46 [IST]