ரயில்வே டிராக்கில் கார்.. பதறி போன போலீஸ்.. காருக்குள்ளே திறந்து பார்த்தால்.. 25 வயசு பெண்.. ஷாக்!
ரயில்வே பாதையில் குடிபோதையில் கார் ஓட்டி சென்ற பெண் கைதானார்
பிரான்ஸ்: ரயில்வே டிராக்கில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார் 25 வயசு பெண்.. இது சம்பந்தமான வீடியோதான் சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது.
ஸ்பெயினின் மாலாகா என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ரயில்வே தண்டவாளம் ஒன்றில், கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.. ரயில்வே டிராக்கில் காரை பார்த்ததுமே அங்கிருந்தோர் பதறிப்போய்விட்டனர்.. அந்த கார், கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ தூரத்திற்கு தண்டவாளத்திலேயே சென்று, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறகு, ரயில்வே சுரங்கப்பாதையின் தொடக்கத்தில் அந்த கார் சிக்கி கொண்டது.. இதை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்த மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் பதறிபோய், உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்... போலீசாரும் விரைந்து வந்து அந்த சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போதுதான் காருக்குள் திறந்து பார்த்தால், 25 ஒரு பெண் உட்கார்ந்திருந்தார்.
அவருக்கு 25 வயதிருக்கும்.. ஃபுல் போதையில் இருந்தார்.. போலீசாரை பார்த்ததும், கார் கதவை திறந்து கொண்டு, தள்ளாடியபடியே வெளியே வந்தார்.. இதையடுத்து அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.. அப்போது, ரத்தத்தில் அனுமதிக்கப்படும் ஆல்கஹால் அளவைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது.. அதனால், அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், குடித்துவிட்டு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்... இந்த பெண் போதையில் டிரயில்வே டிராக்கில் காரை ஓட்டியதும், அந்த கார் சுரங்கப்பாதையில் சிக்கி கொண்டதும் காரணமாக, 2 மணி நேரத்துக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அங்குள்ள கேமராக்களில் பதிவான இக்காட்சிகள்தான் ஆன்லைனில் தற்போது வைரலாகி வருகிறது.