அல்ஜீரிய ராணுவ விமான விபத்து: 257 வீரர்கள் பலியான சோகம்
அல்ஜீரியாவில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் 257 பேர் பலியாகிவிட்டனர்.
அல்ஜீயர்ஸ்: அல்ஜீரியாவில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் 257 வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்ஜீரியா தலைநகர் அல்ஜீயர்ஸில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு Il-76 என்ற விமானம் பௌஃபாரிக் விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம் தெற்கு அல்ஜீரியாவில் உள்ள டின்டஃப் பகுதியில் தரையிறங்க இருந்தது. அப்போது சில நிமிடங்களில் ஆளில்லாத நிலப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 257 வீரர்கள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விமானத்தில் மொராக்கோவின் மேற்கு சஹாராவின் பிரிவினைவாத அமைப்பின் உறுப்பினர்கள் 26 பேரும் விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
🔴#DIRECT 🔴 #Algérie
— Algérie24 (@Alg24net) April 11, 2018
L'avion militaire était à destination de Béchar et s'est écrasé quelques minutes après son décollagehttps://t.co/Uxe6HUFi4X pic.twitter.com/LZpTKEDszH
விமானம் நொறுங்கிய இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது. 14 ஆம்புலன்ஸ்கள், 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெறுகிறது. கடந்த 2014-இல் கிழக்கு அல்ஜீரியாவில் ராணுவ விமானம் நொறுங்கியதில் 77 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.