ஓமனில் மூன்று வருட மழை ஒரே நாளில் பெய்தது.. 15 பேர் பலி.. அதிரவைக்கும் வீடியோ!
ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள் மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது.
Recommended Video
மஸ்கட்: ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள் மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது. மூன்று வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளாது.
ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன் நாட்டிலும் இந்த மழை பெய்துள்ளது. இந்த மோசமான மழை காரணமாக மொத்தம் 15 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர்.
அங்கு மீட்பு பணி செய்ய முடியாமல் அரசாங்கம் கஷ்டப்பட்டு வருகிறது. இன்னும் அங்கு சிறிய அளவில் மழை பெய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன
இந்த பெரிய மழைக்கு அங்கு ஏற்பட்ட புயலே காரணமாகும். மெகுனு என்ற புயல் இந்த மாத இறுதியில் உருவானது. கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து கொண்டே சென்ற அந்த புயல் பெரிய அளவில் மழையை உண்டாக்கி உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த புயல் வீசியது. 260கிமீ வேகம் வரை இந்த புயல் வீசியது.
எப்படி
இங்கு மேக வெடிப்பிற்கு நிகராக மழை பெய்துள்ளது. மொத்தமாக ஒரு இடத்தில் கூடி இருக்கும் மேகம் அப்படியே வெடித்து மொத்தமாக மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று கூறுவார்கள். அந்த மேக வெடிப்பிற்கு நிகராகத்தான் மழை பெய்துள்ளது. இதனால் ஓமனில் உள்ள சலாலா நகரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக எல்லா பகுதிகளும் இதனால் மூழ்கி இருக்கிறது.
எவ்வளவு சேதம்
இந்த மழை மற்றும் புயல் காரணமாக மொத்தம் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். 45 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். இன்னும் வீடுகளில் சிக்கி உணவின்றி தவிக்கும் மக்களை காப்பாற்ற அரசு திணறி வருகிறது. மொத்தம் 2 லட்சம் வீடுகளை இந்த வெள்ளம் சூழ்ந்துள்ளது. மொத்தமாக கடந்த மூன்று நாட்களாக அந்த நகரம் ஸ்தம்பித்து போய் உள்ளது.
|
மழை வீடியோ
சலாலாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 278.2 மிமீ மழை பெய்துள்ளது. புயல் மற்றும் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்த மழையின் வீரியம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இதில் மழை எவ்வளவு மோசமாக கொட்டுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.