நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின.. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகி இருந்ததாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் மேற்கில் உள்ள பகுதி பக்லாக் மாவட்டம். இங்கு நேபாளத்தின் நேரப்படி இன்று அதிகாலை 3:51 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகி இருந்ததாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் சிறிது நேரம் குழுங்கியது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
முன்னதாக நேபாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு 7.8 என்ற அளவில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 9 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். அப்போதைய நிலநடுக்கத்தால் காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் அழிந்து சிதைந்து போனது. இந்த மோசமான பாதிப்பில் இருந்து நேபாளம் இப்போது தான் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.