இரவில் தனியே வெளிவர பயப்படும் பெண்கள்- ஆய்வில் தகவல்
வாஷிங்டன்: உலகம் முழுவதிலும், ஏன் முற்போக்கான நாடுகளில் கூட பெண்கள் தனியாக வெளியில் வர பயம் கொள்கின்றனர் என்று ஒரு ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர பயப்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆண்களை விட மூன்று மடங்கு பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வர பயப்டுவதாகவும், பெண்களுக்கு எதிராக கையாளப்படும் வன்முறைகளே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்கள் மட்டுமின்றி 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதால் தனியாக வெளியே செல்ல பயப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தினம்தினம் அதிகரிக்கும் குற்றங்கள், பெண்களை குறிவைத்தே அதிக அளவில் நடப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போகிற போக்கில் மகாத்மாவே சிலையில் இருந்து உயிர்பெற்று, பெண்கள் கையில் தடியை கொடுத்தாலும் கொடுக்கலாம் யார் கண்டது.