பாகிஸ்தான் ராணுவம் விமானத் தாக்குதல்...தலிபான் தீவிரவாதிகள் 43 பேர் பலி
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ராணுவம் வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தானின் கராலே மே மற்றும் ஷவால் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் விமானங்கள் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
மேலும் இத்தாக்குதலின் போது அங்கு பதுங்கியிருந்த 43 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அப்பகுதியை சேர்ந்த 3000 தலிபான் தீவிரவாதிகளை கொன்றுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் தலிபான் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி இதுவரை 350 ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான ராணுவம் கூறியுள்ளது.