For Daily Alerts
Just In
பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
பாகிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பன்னு நகருக்கு 29 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காலை 8.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
பெஷாவர், கைபர் ஏஜென்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Comments
English summary
5.1 magnitude earthquake hit Pakistan and Afghanistan. No immediate damage and casualities reported.
Story first published: Wednesday, May 9, 2018, 10:38 [IST]