For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்தில் இன்று காலை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

By Siva
Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியிருந்தது.

நேபாளத்தில் எவரெஸ்ட் பகுதி அருகே உள்ள சொலுகும்பு மாவட்டத்தில் இருக்கும் இடத்தை மையமாகக் கொண்டு இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியிருந்தது.

5.5 magnitude earthquake hits Nepal

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து இன்று வரை 475 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவை ரிக்டர் அளவுகோலில் 4க்கும் அதிகமாக இருந்துள்ளன.

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காத்மாண்டு மற்றும் நேபாளத்தின் மத்திய, கிழக்கு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

English summary
A moderate intensity earthquake measuring 5.5 on the Richter Scale shook Nepal in the early hours today. According to the National Centre for Seismology, a unit of Ministry of Earth Sciences, the quake occurred at 5:05 AM at a depth of 10 km.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X