For Quick Alerts
For Daily Alerts
Just In
நேபாளத்தில் மீண்டும் “ஆப்டர் ஷாக்” நிலநடுக்கம் – ரிக்டரில் 5.7 அலகுகளாக பதிவு
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று மாலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று மாலை இந்திய நேரப்படி சரியாக 5.19க்கு இந்த நிலநடுக்க அதிர்வு உண்டாகியுள்ளது. ரிக்டரில் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.
நேபாளத்தின் ரமேசப்பிலிருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்க மையப்புள்ளி அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தின் நமேச் பஜாரில் இந்த நிலநடுக்கம் பெருமளவில் உணரப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச தலைநகர் பாட்னாவிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஏப்ரல் 25 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
An earthquake with magnitude 5.7 occurred near Namche Bazar, Nepal at 11:34:10.10 UTC on May 16, 2015.