For Daily Alerts
Just In
பெற்றோர், காதலி உள்பட 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர்.. அமெரிக்காவில் பரபரப்பு
லௌசியானா: அமெரிக்காவின் லௌசியானாவில் பெற்றோர் மற்றும் காதலி உள்பட 5 பேரை துப்பாக்கியால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவில் கொன்சாலெஸில் வசித்து வந்தவர்கள் எலிசபெத் தேரியட் மற்ரும் கெய்த் தேரியட். இவர்களது மகன் டகோட்டா தேரியட் (21).
டகோட்டா தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தகவலறிந்த போலீஸார் படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
இதே போல் அவர்களது வீட்டருகே உள்ள எர்னெஸ்ட் (43), டேனர் எர்னெஸ்ட் (17) மற்றும் சம்மர் எர்னெஸ்ட் (20) ஆகியோரையும் டகோட்டா சுட்டுக் கொன்றது தெரியவந்தது.என்பது தெரியவந்தது. இவர்களில் ஒருவர் டகோட்டாவின் காதலி என கூறப்படுகிறது. அவர் யார் என்பது தெரியவில்லை.
Comments
English summary
A manhunt is underway in Louisiana following a string of shootings that left the suspect's parents and 3 others dead.
Story first published: Sunday, January 27, 2019, 9:37 [IST]