For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காபூலில் அரசு அலுவலகங்கள் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல்... 5 பேர் பலி

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில், பயங்கர குண்டுவெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தற்கொலைப் படைத் தாக்குதல் என்று கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பு செரீனா என்ற ஹோட்டலுக்கு அருகே நடந்ததாக கூறப்படுகிறது. அந்த இடமே போர்க்களம் போலக் காணப்படுகிறது.

2 வாரங்களில் காபூலில் நடந்துள்ள 5வது மிகப் பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதல் இதுவாகும். தலிபான் தீவரவாதிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்தடுத்து அங்கு குண்டுவெடிப்புகள் நடந்து வருகின்றன.

நீதி மற்றும் சுரங்கத் துறை அலுவலகங்களுக்கு மத்தியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

English summary
Atleast 5 persons were killed in a suicide attack in Afghanistan's capital Kabl.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X