உறவுக்கு மறுக்கும் மனைவியை அடிப்பதில் தப்பே இல்லை: சொல்வது பாக். இளம் பெண்கள் சர்வே
வாஷிங்டன்: மனைவி உறவு கொள்ள மறுத்தால் அவரை அடிப்பது தவறு இல்லை என்று பாகிஸ்தானில் வசிக்கும் இளம்பெண்கள் 53 சதவீதம் பேர் நம்புகிறார்கள் என ஐ.நா. மக்கள் தொகை நிதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா. மக்கள் தொகை நிதிய அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானில் வசிக்கும் இளம்பெண்களில் 15 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மனைவி உறவு கொள்ள மறுத்தால் அவரை அடிப்பது தவறு இல்லை என்று நம்புகிறார்கள். 15 முதல் 19 வயது வரை உள்ள பாகிஸ்தான் இளம்பெண்களில் 30 சதவீதம் பேர் சித்ரவதை மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.
உலகிலேயே பாகிஸ்தானில் தான் பதின்வயதுக்காரர்கள்(10-19 வயது) அதிக அளவில் ஹெச்ஐவி பாதிப்புடன் இருக்கின்றனர். பாகிஸ்தானை அடுத்து இந்தியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் பதின்வயதினர் ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய கல்வி அறிவு இல்லாமை, வேலையின்மை மற்றும் குடும்பத்தில் பிறர் சித்ரவதை செய்யப்படுவதை பார்த்து சித்ரவதை செய்வதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு பாகிஸ்தான் இளம்பெண்களுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.