For Daily Alerts
Just In
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் அளவுக்கு இன்று அதிகாலை சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
இந்தோனேஷியாவின், கிழக்கு பகுதியில் உள்ள பாண்டா கடல் பகுதியில், 171 கி.மீ ஆழத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு சார்பில், சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.
ஆனால், சில நிமிடங்களில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
A 6.4 magnitude earthquake struck off eastern Indonesia in the early hours today, triggering a brief tsunami alert that was swiftly lifted, according to seismic monitoring organisations.
Story first published: Monday, March 26, 2018, 7:38 [IST]