For Quick Alerts
For Daily Alerts
Just In
சீனாவில் இடிந்து விழுந்த 6 மாடிக் கட்டிடம்- 6 பேர் பலி; 8 பேர் மீட்பு
பீஜிங்: சீனாவில் 6 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் அன்யுவான் மாவட்டத்தில் உள்ள பிங்சியாங் நகரில் ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியான ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முக்கிய ஊடகமான க்சின்ஹுவா தெரிவித்துள்ளது.
அந்த கட்டிடத்தின் நான்காம் மாடியில் நடைபெற்ற சில புதுப்பிக்கும் வேலையால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
6 people have been confirmed dead in a residential building collapse in east China's Jiangxi Province, after rescuers retrieved four more bodies Saturday.
Story first published: Sunday, February 28, 2016, 16:46 [IST]