தெற்கு அட்லாண்டிக் கடலுக்கடியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை!
பெர்லின்: தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்நிலநடுக்கத்தின் அளவு 7.4 ரிக்டராக பதிவாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
தெற்கு அட்லாண்டிக் பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் மையம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ வேறு பாதிப்புகளோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் என்னும் வெளியாகவில்லை.
தெற்கு ஜார்ஜியா தீவிப் பகுதியில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் உள்ள பகுதியானது, அர்ஜென்டினாவின் தென் முனையிலிருந்து கிழக்கே 1500 மைல் தூரத்தில் உள்ளது. பாக்லாந்து தீவுக்குட்பட்ட பகுதி இது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.