For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் மதுபான விடுதி மீது போலீஸ் ஹெலிகாப்டர் மோதி விபத்து: 8 பேர் பலி

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் மதுபான விடுதியின் மொட்டை மாடியில் போலீஸ் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி எட்டுபேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு, இங்கிலாந்தின் கிலாஸ்கோ நகரில் உள்ள பிரபல மதுபான விடுதியின் மொட்டை மாடியில் ஏராளமானோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பறந்து வந்த போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விடுதியின் மீது மோதியது.

ஹெலிகாப்டர் மோதியதால், மதுபான விடுதி இடிந்து விழுந்தது. இதில், விடுதியில் இருந்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்புப் பணியில் துரித கதியில் ஈடுபட்டனர்.

8 dead in police helicopter crash onto Glasgow pub

விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 போலீசாரும், விடுதியில் இருந்த 5 பேரும் பலி பரிதாபமாகப் பலியாகினர். பலியான ஐந்து பேரில் ஒருவரது பெயர் மட்டும் அடையாளம் காணப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலரின் நிலைமை மேலும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Scottish authorities raised the death toll to eight people Saturday in the crash of a police helicopter into a crowded Glasgow pub, stressing that a rescue and recovery operation is ongoing and it is unclear what they will find when the aircraft's wreckage is moved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X