For Daily Alerts
Just In
சவுதி: சாலையைக் கடந்த ஒட்டகம் மீது கார் மோதி விபத்து... 8 பேர் பலி
ரியாத்: சவுதி அரேபியாவில் ஒட்டகம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் தெற்கு ஆசிர் மாகாணத்தின் சாலை வழியாக கார் ஒன்றில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று சாலையைக் கடந்த ஒட்டகம் மீது கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் பாதையிலேயே இருவர் உயிரிழந்தார்கள். காயமடைந்த மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே காரின் குறுக்கே வந்த ஒட்டகத்திற்கு அடி பட்டதா, அதன் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை.
Comments
English summary
A car carrying 11 people rammed into a camel in Saudi Arabia and overturned off the road, killing eight and injuring the remaining passengers.
Story first published: Friday, June 20, 2014, 16:02 [IST]