அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 2வது பயங்கரம்.. 9 பேரை சுட்டுக்கொன்ற இன்னொரு மர்மநபர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் டேடான் நகரில் மர்ம மனிதன் 9 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக டெக்சாஸின் எல் பசோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள நகரம் டேடான். இங்கு மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 16 குண்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய மர்ம மனிதனும் உயிரிழந்தான்.
மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து காயமடைந்தவர்களை உடனே அருகில் இருந்து மியாமி வேலி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களின் நிலைகுறித்து இதுவரை தெளிவான தகவல் தெரியவில்லை. தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே அமெரிக்காவின் டேடான் போலீசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரிகான் மாவட்டத்தின் டேடன் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. எனவே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
உதவி வேண்டினால்
மேலும் டேடான் நகர போலீசார், இது தொடர்பாக ஏதேனும் பொதுமக்களுக்கு உதவி தேவைப்பட்டால் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
20 பேர் சுட்டுக்கொலை
முன்னதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகாணம் எல் பசோவில் அமைந்துள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் 20 பேரை சுட்டுக்கொன்றார். மேலும் 25 பேரை படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
29 பேர் சுட்டுக்கொலை
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.