For Daily Alerts
Just In
ஆஸி.யில் நாடு கடத்த விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ்க் குடும்பம் கடைசி நேரத்தில் இறக்கிவிடப்பட்டது
ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த ஈழத் தமிழர் குடும்பம் கடைசி நிமிடங்களில் தப்பியது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ்க் குடும்பம் கடைசி நேரத்தில் இறக்கிவிடப்பட்டது.
விசா விவகாரத்தில் ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா, குழந்தைகள் கோபிகா, தருணிகா ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என கூறியது ஆஸ்திரேலியா. இதற்காக இந்த குடும்பம் ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அதேநேரத்தில் இவர்களை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் இத்தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்த விமானத்தில் ஏற்றியது இலங்கை அரசு.
பின்னர் திடீரென கடைசி நேரத்தில் இக்குடும்பம் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் இத்தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவது தடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
A Eelam Tamil family removed from the plane before Deport in Australia.