For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புது மனைவியில் உறுப்பில் ஆணியை சொருகி 48 மணிநேரம் கொடூர சுகம் - கசப்பில் முடிந்த தேனிலவு

பெண்களை துன்புறுத்தி உல்லாசம் அனுபவிப்பது சிலருக்கு விருப்பம். ஜெர்மனியில் இப்படித்தான் புது மணப்பெண்ணை தேனிலவு போன இடத்தில் ஆணியை சொருகி 48 மணிநேரம் கொடூர சுகம் அனுபவித்துள்ளான் கணவன். அந்த பெண்ணோ சீ

Google Oneindia Tamil News

ஜெர்மன்: மனைவியின் உறுப்பிற்குள் ஆணி போன்ற ஒரு பொருளை சொருகி 48 மணிநேரம் விடாமல் சுகம் அனுபவித்த நபரால் அந்த இடத்தில் காயம்பட்டு சீழ் பிடித்து புதுப்பெண் உயிரிழந்துள்ளார். ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர்.

மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருக்கும் ராலப் ஜன்கஸ் என்ற 52 வயதான நபருக்கு கணவனை இழந்த கிறிஸ்டல் மீது ஆசை. அந்த பெண்ணிற்கு 49 வயதாகிறது. 30 வயதில் ஒரு மகன் இருக்கிறார். வயதானாலும் குழந்தை மனம் கிறிஸ்டலுக்கு. அந்த பெண்ணின் வெகுளித்தனம்தான் ராலப்பிற்கு வசதியாக போனது. நட்பாக பழகி லிவ் இன் வாழ்க்கை நடத்தினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

A German man is accused of killing his new wife

திருமணம் முடிந்த அந்த தம்பதியர் ஆகஸ்ட் மாதம் தேனிலவுக்கு சென்றனர். அங்குதான் விபரீதம் அரங்கேறியது. ராலப்பிற்கு விபரீதமான ஒரு ஆசை உள்ளது. பெண்களை துன்புறுத்தி உறவு கொள்ளும் வக்ர புத்தி உள்ளது. அதனை தனது புது மனைவியிடம் ஹனிமூனில் செயல்படுத்தினார்.

வயதான குழந்தை போன்ற அந்த பெண்ணின் உறுப்பிற்குள் கூர்மையான ஆணி போன்ற ஒரு பொருளை சொருகினார். அந்த பெண் வலியால் துடித்த போது இவர் சுகம் அனுபவித்தார். ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரமல்ல 48 மணிநேரம் தொடர்ந்து உறவு கொண்டதாக தெரிகிறது.

இதில் கிறிஸ்டலின் உள் உறுப்புகளில் காயம் ஏற்பட்டு சீழ் பிடித்தது. ஆனால் சரியான சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை. இதில் கிறிஸ்டலின் உடல்நிலை மோசமாகவே மருத்துவமனையில் அனுமதித்தாத் ராலப். ஆனாலும் நோயின் தீவிரம் அதிகரிக்கவே கிறிஸ்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல ஆண்டுகள் ஒன்றாக லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்த போது மகிழ்ச்சியாக இருந்த அவர்கள் திருமணம் ஆகி சில நாட்களிலேயே கிறிஸ்டல் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது திருமணம் பற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்த ராலப் தனது மனைவி திடீரென மரணமடைந்து விட்டதாக கூறியிருந்தார். எட்டு நாட்களில் தங்களின் மணவாழ்க்கை சோகத்தில் முடிந்ததாகவும் பதிவிட்டிருந்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டலின் 30 வயது மகன் ராலப் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை ஜெர்மன் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

குழந்தை போன்ற தனது தயாரை ராலப் துன்புறுத்தியதால்தான் மரணம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

கிறிஸ்டல் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தபோது அந்தரங்க உறுப்பில் கூர்மையான ஆணி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கோர்ட்டில் பதில் சொன்ன ராலப் தனக்கு பெண்ணை துன்புறுத்தி உறவு கொள்வது பிடிக்கும் என்று கூறினார். ஆனால் இந்த அளவிற்கு விபரீதத்தில் முடியும் என்று தான் நினைக்கவில்லை என்றும் கூறினார்.

English summary
A German man man is accused of killing his new wife by inserting a metal hook inside her during a 48-hour bondage sex session.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X