For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானத்தில் தோன்றிய ராட்சச கருப்பு வளையம்.. பாகிஸ்தானில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு.. ஏலியனா? - வீடியோ

பாகிஸ்தானின் லாகூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வானத்தில் பட்டப்பகலில் கருப்பு நிற வளையம் தோன்றியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானில் வானத்தில் தோன்றிய கருப்பு வளையம் |Dark circle formed on Pakistan Sky

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லாகூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வானத்தில் பட்டப்பகலில் கருப்பு நிற வளையம் தோன்றியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    உலகம் முழுக்க வானத்தில் அவ்வப்போது விசித்திரமான சம்பவம் நடப்பது வழக்கம். அவ்வப்போது வந்ததில் ஆள் இல்லாத வித்தியாசமான விமானங்கள் தோன்றும். இரவில் ஒளிப்புள்ளிகள் தோன்றுவதும் கூட நடக்கும்.

    பெரும்பாலான சமயங்களில் இது பொய்யான திரிக்கப்பட்ட வீடியோவாக இருக்கும். சில சமயங்களில் இதற்கு பின் உண்மையான அறிவியல் விளக்கங்கள் ஏதாவது இருப்பதும் கூட வழக்கம்.

    இந்தியாவிற்கு ஏன் ஸ்பெஷல் சலுகை.. நிறுத்துங்கள்.. சர்வதேச அரங்கில் டிரம்ப் கோரிக்கை.. ஏன் கோபம்? இந்தியாவிற்கு ஏன் ஸ்பெஷல் சலுகை.. நிறுத்துங்கள்.. சர்வதேச அரங்கில் டிரம்ப் கோரிக்கை.. ஏன் கோபம்?

    என்ன நிலை

    என்ன நிலை

    இந்த நிலையில்தான் பாகிஸ்தானின் லாகூரில் வானத்தில் வளையங்கள் தோன்றி உள்ளது.நேற்று முதல் நாள் இந்த வளையங்கள் வானத்தில் தோன்றியது.காலை முதல் மாலை வரை இந்த வளையங்கள் வானத்தில் அப்படியே இருந்துள்ளது. இந்த வளையங்கள் காரணமாக அங்கு மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக இணையத்தில் நிறைய வீடியோக்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

    வானம் எப்படி

    வானத்தில் பெரிய அளவில் கருப்பு நிறமாக இந்த வளையம் காட்சி அளித்துள்ளது. வெள்ளை நிற மேகத்திற்கு இடையில் இந்த வளையம் இருந்துள்ளது. மிக முக்கியமாக இந்த வளையம் கொஞ்சம் கொஞ்சமாக இங்கும், அங்கும் நகர்ந்து சென்றுள்ளது. இது பார்க்க விசித்திரமாக இருந்துள்ளது. இதனால் இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

    ஏலியனா

    இந்த நிலையில், இந்த வளையங்கள் ஒருவேளை ஏலியன்களால் ஏற்பட்டதா என்று மக்கள் சந்தேகம் கொள்ள தொடங்கினார்கள். இது எதுவும் ஏலியன் விமானமா என்று குழப்பம் அடைய தொடங்கினார்கள். அதே போல் பாகிஸ்தானின் வேறு சில பகுதியிலும் இந்த வளையம் தோன்றி உள்ளது. காஷ்மீரிலும் இந்த வளையம் தோன்றியுள்ளது. லண்டன் உள்ளிட்ட உலகின் வேறு சில இடங்களிலும் வளையம் தோன்றியுள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த நிலையில், இந்த வளையம் ஏதாவது புகை காரணமாக ஏற்பட்டு இருக்கலாம். உலகம் முழுக்க சில இடங்களில் இது ஏற்படும். தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் அதிகப்படியான புகை காரணமாக இப்படி ஏற்படலாம். அதேபோல் எங்காவது குண்டு வெடிப்பு, புகை போக்கி வெடிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இப்படி நடக்கும் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    English summary
    A huge dark circle formed on Pakistan Sky: What the real reason behind it?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X