For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மது ஊற்றிக் கொடுத்து கொலை.. திருடிய குற்றத்திற்காக எலிக்கு கிடைத்த குரூர தண்டனை!

சீனாவில் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் வித்தியாசமான முறையில் தண்டிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டில் திருடிய எலியை மிகவும் வித்தியாசமான முறையில் தண்டித்து இருக்கிறார். இதற்காக அவர் எலிக்கு மது ஊற்றிக் கொடுத்து பின் கொடுமைபடுத்தி கொலை செய்து இருக்கிறார்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள வீடு ஒன்றில் பிரெட் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் மோசமான வகையில் தண்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரெட் திருடப்பட்ட அந்த வீட்டு உரிமையாளர் வித்தியாசமான ஒரு தண்டனை முறையை கடைப்பிடித்து இருக்கிறார்.

A man in China has force-fed alcohol to rat and killed it

அதன்படி திருடிய எலிக்கு அவர் முதலில் மது ஊற்றிக் கொடுத்து போதை ஆக்கி இருக்கிறார். அதன்பின் அந்த எலியை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமைபடுத்தி பின் மெதுவாக கொலை செய்துள்ளார்.

மேலும் அவர் அந்த எலியின் மீது தீ முட்டி "எங்க வீட்டு பிரெட்டை நல்லா சாப்பிட்டியா, இப்ப நெருப்பு உன்னை நல்லா சாப்பிடுது பார்'' என்று சத்தமாக கூறி இருக்கிறார். மேலும் அந்த எலியை கொலை செய்துவிட்டு அந்த நபர் வீடியோவில் தான் செய்த செயல் குறித்தும் பேசி இருக்கிறார்.

இவர் எலியை கொலை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

English summary
A man in China has force-fed alcohol to rat and killed it. The man did this in order punish the rat for stealing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X