டென்மார்க்கில் அண்ணன் வாயில் உருளைகிழங்கை திணித்து வினோத முறையில் கொலை
கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டில் சகோதரன் வாயில் உருளைகிழந்தை திணித்து கொலை செய்தவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொபன்ஹெகனில் உள்ள ஜூட்லேண்ட் தீபகற்பத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த சகோதரர்கள் இரண்டு பேருக்குமிடையே கடந்த நவம்பர் மாதம் சண்டை ஏற்பட்டது. இதில் 57 வயதான தனது சகோதரனை அவரது இளைய சகோதரன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவரது மூச்சுக் குழலில் உருளைக்கிழங்கு அடைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவரை கைது செய்து விசாரித்தபோது, தனது சகோதரரின் தொண்டையில் உருளைக்கிழங்கு மாட்டிக்கொண்டதாகவும், அதனை எடுக்குமாறு அவரது சகோதரர் அவரிடம் கெஞ்சி கேட்டதாகவும், அவரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அவரது கழுத்தை நெற்த்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், நீதிபதி இவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, திட்டமிட்டு மூத்த சகோதரனைக் கொன்றதற்காக ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.