இன்டர்நெட் சென்டரில் இளைஞரின் 'டிக்கி"யை கடித்த பாம்பு.. பீதியில் அலறி ஓடிய இளைஞர்! - வீடியோ
தாய்லாந்தில் இன்டர்நெட் சென்டரில் இளைஞரை பாம்பு ஒன்று தாவி வந்து கடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
விசெட் சாய் சான்: தாய்லாந்தில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டரில் இளைஞரை பாம்பு ஒன்று தாவி வந்து கடித்தது. இதனைக் கண்டு அலறிய அந்த இளைஞர் தரையில் விழுந்து புரண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
தாய்லாந்தின் விசெட் சாய் சான் மாவட்டத்தில் இன்டர்நெட் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இதில் வேலையை முடித்துவிட்ட இளைஞர் ஒருவர் வெளியே செல்ல கதவை திறந்தார். அப்போது வெளியே இதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போன்று நின்ற பாம்பு ஒன்று இளைஞரின் மீது தாவி காலில் சுற்றி டிக்கியை கடித்தத.
இதனால் அலறிய அந்த இளைஞர் மீண்டும் இன்டர்நெட் சென்டருக்குள்ளேயே ஓடி வந்து தலையை அறுத்த கோழி போல கீழே விழுந்து புரண்டார். இதையடுத்து அந்த பாம்பு அவரை விட்டு விலகி ஒரு இடுக்கில் சென்று புகுந்துகொண்டது.
இதனால் அந்த இன்டர்நெட் சென்டரில் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்தக்காட்சி வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.