100க்கும் மேற்பட்ட சிறுமிகளுடன் உறவு கொண்ட சாமியார்!
டர்பன்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் சாமியார் ஒருவர் 100க்கும் மேற்பட்ட சிறுமிகளுடன் உறவு கொண்டுள்ள வினோதம் நடந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவியில் ஒரு வினோதமான பழக்கம் உள்ளது. அந்நாட்டில் வசிக்கும் பெண்கள் தங்களின் இளம் வயது மகள்களை உடல் ரீதியாக தூய்மைப்படுத்தும் வகையில் முன்பின் அறியாத ஒருவருடன் உறவு கொள்ள வைக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மாலாவியின் பல்வேறு பகுதிகளில் இந்த வினோத பழக்கம் உள்ளதாம். இந்நிலையில் மாலாவியை சேர்ந்த சாமியார் ஒருவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
சாமியார்
நான் இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன். அதில் சில சிறுமிகள் 12 முதல் 13 வயது வரை உள்ளவர்கள். அவர்களை தூய்மைப்படுத்தவே நான் உறவு கொள்கிறேன்.
அம்மாக்களே
சிறுமிகளுடன் உறவு கொண்டு அவர்களை தூய்மைப்படுத்துமாறு அவர்களின் தாய்மார்களே எனக்கு பணம் அளிப்பார்கள். ஒரு சிறுமியுடன் உறவு கொள்ள ரூ.450 வரை எனக்கு கிடைக்கும்.
பலாத்காரமும்
தூய்மை அடைய விரும்புவதால் சிறுமிகள் என்னை அவர்களுடன் உறவு கொள்ள அனுமதிப்பார்கள். ஆனால் சிலர் என்னை அவர்களை தொட விட மாட்டார்கள். அப்போது நான் அவர்களுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வேன்.
விதவைகள் கூட
சிறுமிகள் மட்டும் அல்ல விதவைகளுடனும் உறவு கொண்டு வருகிறேன். அவர்களை தூய்மை அடைய வைக்க அவர்களின் கணவரின் இறுதிச் சடங்கு நடக்கும் முன்பு அவர்களுடன் உறவு கொள்வேன். இப்படி நான் சிறுமிகள், விதவைகளுடன் உறவு கொள்வதால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கம் ஏற்பட்டு, எதிர்காலத்தில் நல்ல மனைவிகளாக இருப்பார்கள் மேலும் கணவனின் ஆசையை பூர்த்தி செய்வார்கள் என்கிறார் சாமியார்.