கியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன!
கியூபாவில் நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 104 பேரும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
ஹவானா: கியூபாவில் ஹவானா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானம், விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 104 பயணிகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
கியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு இன்று விமானம் புறப்பட்டது. அதில், 104 பயணிகள் இருந்தனர்.
ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது.
உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விமானத்தில் பயணித்த 104 பயணிகள் நிலை குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அரசு விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானா, பல பழைய விமானங்களை சமீபத்தில் தான் பயன்படுத்துவதை நிறுத்தியது. விபத்துக்குள்ளான இந்த விமானம் சமீபத்தில்தான் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.