ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் விலகல்!
ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் என்று விலகி இருக்கிறது.
Recommended Video
நியூயார்க்: ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் என்று விலகி இருக்கிறது.
உலக நாடுகளில் அமைதியை கொண்டு வர அமெரிக்காவின் மனித உரிமை கவுன்சில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. முக்கியமாக போர் காலங்களில், மனித உரிமை கவுன்சிலின் பங்கு அதிக தேவை. இதில் உலகின் முக்கிய நாடுகள் எல்லாம் அங்கம் வகிக்கிறது.
மனித உரிமை கவுன்சில் பொதுவாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. அமெரிக்க அந்த கவுன்சிலின் முடிவுகளில் அதிக தலையீடு காட்டுவதாக கூறியது.
இந்த நிலையில்தான் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா திடீர் என்று விலகி இருக்கிறது. ஐநாவின் மனித உரிமை கவுன்சில் நாடுகளுக்கு இடையில் பாகுபாடு காட்டுகிறது. பெரிய அளவில் அரசியல் பாகுபாடு காட்டுகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
US announces it is withdrawing from the UN Human Rights Council, calling it "a protector of human rights abusers" https://t.co/BRlFvhtAAS pic.twitter.com/hcunoRxgaH
— Rosy (@rose_k01) June 20, 2018
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்க பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகியது. அதன்பின் ஈரான் உடன்படிக்கையில் இருந்தும் விலகியது. இந்த நிலையில் தற்போது மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகியுள்ளது.
அடுத்த என்னமாதிரியான நடவடிக்கை எடுக்க உள்ளது என்று தெரிவிக்கவில்லை. ஆனால் ஐநாவின் செயல்படும் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக அந்நாடு நேற்று அறிவித்துள்ளது.