பறக்கும் போதே வழி தவறிய ஏவுகணை.. மிரண்டு போன அமெரிக்க விமான படை.. கடைசி நொடியில் வெடித்தது!
அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையில் பிரச்சனை ஏற்பட்டதால் அது வானத்திலேயே வைத்து அழிக்கப்பட்டது.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையில் பிரச்சனை ஏற்பட்டதால் அது வானத்திலேயே வைத்து அழிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை வைத்து இருக்கிறது. இந்த ஏவுகணைகள் மூலம், உலகில் எந்த நாட்டையும் தாக்கும் சக்தி சில நாடுகளுக்கு இருக்கிறது.
அந்த வகையில் அமெரிக்கா விமானப்படை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து வருகிறது. தற்போது புதிய ரக ஏவுகணைகளை சோதனை செய்கிறது.
மினிட்மேன் ஏவுகணை
இந்தநிலையில் நேற்று மினிட்மேன் 3 ஏவுகணையை சோதனை செய்தார்கள். மினிட்மேன் 1 மற்றும் 2 வெற்றிபெற்றதை அடுத்து 3வதை சோதனை செய்தார்கள். அமெரிக்காவின் வேண்டர்பேர்க் போர் விமானதளத்தில் இருந்து இந்த ஏவுகணையை சோதனை செய்தனர்.
சரியாக செல்லவில்லை
ஆனால் இந்த ஏவுகணை வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போதே பிரச்சனையில் சிக்கியது. விமானப்படை நிர்ணயித்து இருந்த புள்ளியை நோக்கி செல்லாமல் விலகி சென்று இருக்கிறது. இதனால் விமானப்படை வீரர்கள், அதிகாரிகள் பதட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
வெடிக்க வைத்தனர்
இதையடுத்து விமானப்படை அதிகாரிகள் வேகமாக வேலையில் இறங்கினர். வானத்தில் செல்லும் போதே அதை வெடிக்க வைத்தனர். தானாக வெடிக்க வைக்கும் வசதியை வைத்து, ஏவுகணையை வானத்திலேயே வெடிக்க வைத்தனர்.
பிரச்சனை
நேற்று இந்த ஏவுகணையை வெடிக்க வைக்கவில்லை என்றால் வேறு எங்காவது விழுந்து வெடித்து இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது .