ஆப்கானிஸ்தானில் விமான விபத்து.. தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்தது.. 83 பேரின் நிலை என்ன?
ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த விமானம் போயிங் நிறுவனத்தை சேர்ந்த 737-400 விமானம் ஆகும். ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து இன்று காலை அந்த விமானம் புறப்பட்டுள்ளது. காபூல் நோக்கி அந்த விமான சென்றுள்ளது.
அப்போது காஸ்னி அருகே விமானம் விபத்திற்கு உள்ளாகி, கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக போயிங் 737-400 விமானம் விபத்திற்கு உள்ளானது.
தற்போது விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விமானத்தில் பயணித்தவர்கள் நிலை என்ன என்று குறித்து விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த விபத்து நடந்த பகுதி தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும். அங்கு இதனால் மீட்பு பணியை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தாலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகே முழுமையான மீட்பு பணியை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.