For Daily Alerts
Just In
பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு
கராச்சி: ரிக்டர் அளவில் 4.8 என்ற அளவுக்கான நிலநடுக்கம் திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை அதிகாலை 4:14 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
அட்சரேகை: 36.13 மற்றும் தீர்க்கரேகை: 71.97, ஆழம்: 10 கி.மீ, இடம்: பாகிஸ்தான் என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் ட்வீட் செய்துள்ளது. நகர் அல்லது ஊரின் பெயர் ட்வீட்டில் தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரம், இந்த மிதமான ஒரு நிலநடுக்கத்தால், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
An earthquake measuring 4.8 on the Richter scale hit Pakistan on Monday morning, according to the National Centre for Seismology.
Story first published: Monday, October 26, 2020, 6:32 [IST]