ஒரு வேளை உலகம் முடியப் போகுதோ...?- கிலியை ஏற்படுத்தும் சைபீரியாவின் பெரும் பள்ளம்!
மாஸ்கோ: சைபீரியாவின் யாமல் தீபகற்பத்தில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்குட்பட் வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது.
இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு இப்பகுதி ஆகும். உலகத்தின் கடைசிப் பகுதி என்றும் இது அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மெகா சைஸ் பள்ளம் தோன்றியுள்ளது. இது 80 மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது.
ஆனால் ஆழம் என்ன என்று தெரியவில்லை. எனவே அதன் ஆழம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திடீரென இந்தப் பள்ளம் தோன்றியது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது.
ஆனால் பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளத்திற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இப்பெரும் பள்ளத்தால் உலகத்தின் அழிவின் துவக்கம் ஏற்பட்டுள்ளதோ என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.