சிரியாவைச் சேர்ந்த குழந்தையை தத்தெடுக்கும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி
நியூயார்க்: பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி சிரியாவைச் சேர்ந்த ஆண் குழந்தையை தத்தெடுக்க உள்ளாராம்.
பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, நடிகர் பிராட் பிட் தம்பதிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். அதில் மாடாக்ஸ், பாக்ஸ், ஜஹரா ஆகியோர் தத்தெடுக்கப்பட்டவர்கள். ஷிலோ, இரட்டையர்களான விவியன் மற்றும் நாக்ஸ் ஜூலி, பிட் தம்பதிக்கு பிறந்தவர்கள்.
இந்நிலையில் ஜூலி அண்மையில் சிரிய அகதிகள் தங்கியுள்ள முகாமிற்கு சென்றுள்ளார். அந்த முகாமில் ஆதரவில்லாமல் இருந்த 3 சகோதரர்களான சிறுவர்களை பார்த்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜூலி அந்த 3 பேரையும் தத்தெடுக்கலாமே என்று தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பிராட் பிட், 3 குழந்தைகளை தத்தெடுத்தால் நம் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற தெரியவில்லை. அதனால் ஒரு குழந்தையை மற்றும் தத்தெடுப்போம் என கூறியுள்ளார். இதையடுத்து கணவரின் அறிவுரைப்படி அவர் ஒரு குழந்தையை தத்தெடுக்க உள்ளாராம்.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவைச் சேர்ந்த குழந்தையை ஜூலி தத்தெடுப்பதை பலரும் பாராட்டியுள்ளனர்.