அமெரிக்க பள்ளியில் பயங்கரம்... மாணவன் சுட்டதில் 8 பேர் பலி!
அமெரிக்க பள்ளியில் மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியாயினர்.
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் ஒரு மாணவன் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் குறித்த விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இளம் மாணவர்கள் கூட துப்பாக்கியைப் பயன்படுத்துவது தொடர்ந்து விவாத அளவிலேயே உள்ளது.
இந்த நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் இன்று ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் வளைத்து பிடித்தனர். அதில், அவர், அந்தப் பள்ளியின் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
எதற்காக அந்த மாணவன், மற்றவர்களை துப்பாக்கியால் சுட்டான் என்பது குறித்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.