பாகிஸ்தான், எமிரேட்ஸ், குவைத், லெபனான், துருக்கி என 10 நாடுகளை உலுக்கிய ‘ஈராக்’ நிலநடுக்கம்
ஈராக் மட்டுமின்றி வளைகுடா நாடுகளையும் அதிர வைத்திருக்கிறது நிலநடுக்கம்.
பாக்தாத்: ஈராக்- ஈரான் எல்லையில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், லெபனான், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகளை அதிர வைத்திருக்கிறது.
ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை பயஙகர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 7.3 ஆக பதிவாகி இருந்தது.
இந்நிலநடுக்கத்தால் ஹலாப்ஜா நகரே உருக்குலைந்து போயுள்ளது. அத்துடன் ஈராக்கின் அத்தனை மாகாணங்களையும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி எடுத்திருக்கிறது.
Felt the tremors few minutes back #earthquake #dubai
— harshdhoot (@harshdhoot) November 12, 2017
இதனால் வீடுகள், கட்டிடங்களை விட்டு பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். அதேநேரத்தில் இந்நிலநடுக்கமானது ஈராக் உட்பட 10 நாடுகளையும் அதிர வைத்திருக்கிறது.
omg earthquake in Dubai! I thought I was dizzy for staring at my laptop
— Myla Smith (@findmeabreak) November 12, 2017
ஈராக், ஈரான், துருக்கி, சிரியா, குவைத், ஜோர்ட்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா ஆகிய நாடுகளையும் இந்நிலநடுக்கம் குலுங்க வைத்திருக்கிறது. வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
There was in Dubai as well https://t.co/FYtrHkhHea
— Florian Kriechbaumer (@djflore) November 12, 2017