போப்பாண்டவரைப் பார்க்க வந்த கவர்ச்சி அழகி வெளியேற்றம்.. பிரா போடாமல் வந்ததால்!
வாடிகன் சிட்டி: போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸைப் பார்ப்பதற்காக அர்ஜென்டினாவிலிருந்து வந்திருந்த இளம் மாடல் அழகிக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அவர் பிரா போடாமல் டிரஸ் போட்டிருந்ததால் அவரை அந்த இடத்திலிருந்து பாதுகாவலர்கள் அகற்றி விட்டனர்.
இதுதொடர்பான செய்தியும், புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது.
மிகவும் மெல்லிய உடலை ஒட்டிய உடையுடன் விக்டோரியா ஸிபோலிடாக்கிஸ் என்ற அந்தப் பெண் வந்திருந்தார். உள்ளாடை போடவில்லை. இதனால் அப்பட்டமாக மேலழகு தெரிந்தது. இதையடுத்து அவரை பார்வையாளர் வரிசையிலிருந்து அகற்றி வெளியேற்றினர் பாதுகாவலர்கள்.
இதெல்லாம் சகஜமப்பா
இந்த பெண் இதுபோல சர்ச்சையாக வருவது முதல் முறையல்ல. பலமுறை இப்படி சேஷ்டையாக நடந்திருக்கிறாராம் இப்பெண்.
2 பைலட்டுகளுக்கு வேலை போச்சு தெரியுமா
கடந்த மாதம் இரு விமான பைலட்டுகளை ஏமாற்றி, ஆசை வார்த்தை பேசி காக்பிட்டுக்குள் போய் விட்டார். இதனால் அந்த இரண்டு பைலட்டுகளும் வேலையை விட்டுத் தூக்கப்பட்டனராம்.
பராகுவே வந்த விக்டோரியா
29 வயதான இந்த அணி அர்ஜென்டினாவில் மாடல் அழகியாக இருக்கிறார். பராகுவே வந்துள்ள போப்பாண்டவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். ஆஸன்சியான் என்ற நகரில் போப்பாண்டவருக்காக காத்திருந்தார். அவரைப் போல நூற்றுக்கணக்கானோர் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.
வெள்ளை நிற மேலாடை.. உள்ளே ஒன்றும் இல்லை
அவர் வெள்ளை நிற மேலாடையும், நீல நிறத்திலான ஜீன்ஸ் உடையும் அணிந்திருந்தார். உள்ளே பிரா போடவில்லை. இதனால் மேல் பகுதியில் மேலழகு அப்பட்டமாக தெரிந்தது.
என்னம்மா நீங்க.. கிளம்புங்கம்மா
அங்கு கூடியிருந்தவர்கள் அத்தனை பேர் கண்களும் அவர் மீதே விழுந்து எழுந்தன. இவர் பாதுகாவலர்கள் கண்ணிலும் பட்டு விட்டார். உடனடியாக அவரை நெருங்கிய பாதுகாவலர்களும், போலீஸாரும், இந்த இடத்தை விட்டு செல்லுங்கள் என்று அவரிடம் உத்தரவிட்டனர். அவரை அங்கிருந்தும் அகற்றினர்.
போட்டோஷாப் சேட்டை
இவர் இப்படி சேஷ்டை செய்வது முதல் முறையல்ல. 6 மாதங்களுக்கு முன்பு தனது பின்னழகை போட்டோஷாப் மூலம் பெரிதாக்கி பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.
காக்பிட்டுக்குள் விசிட்
கடந்த மாதம் ஒரு விமானத்தில் பயணித்தபோது அந்த விமானிகளை ஏமாற்றி, ஆசை வார்த்தை பேசி காக்பிட்டுக்குள் போய் விட்டார். இதனால் அந்த இரு விமானிகளும் வேலையை இழந்து ரோட்டில் திரிகின்றனராம்.
இதயத்தின் அடி ஆழத்திலிருந்து
இருவருக்கும் தன்னால்தான் வேலை போனது என்பதை அறிந்ததும், எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்தார். என்னத்தைக் கேட்டு என்ன புண்ணியம்.
என்னை மன்னியுங்கள்
இந்த நிலையில் போப்பாண்டவரைப் பார்த்த பாவ மன்னிப்பு கோரப் போவதாகவும் கூறி வந்தார். இதற்காக போப்பாண்டவரைப் பார்க்கவும் முயன்றார் முடியவில்லை. இந்த நிலையில்தான் பராகுவே வந்த போப்பாண்டவரைப் பார்க்க ஓடி வந்தார்.
பாவ மன்னிப்பு கேட்க வந்தவர் மாதிரியே தெரியலையே
ஆனால், உண்மையில், விக்டோரியா போட்டிருந்த டிரஸ்ஸைப் பார்த்தால் பாவ மன்னிப்பு கேட்க வந்தவர் மாதிரி தெரியவில்லை.
என்னவோ போங்கம்மா!