வெனிசுலா சிறைக்கலவரம்: 16 கைதிகள் தலை வெட்டப்பட்டு கொடூரக் கொலை
மரக்காய்போ : வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ளது மராகாய்போ நகர். கடந்த திங்களன்று அங்குள்ள சிறையில் உள்ள இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்களிடையே மோதல் உண்டானது. மோதலைத் தொடர்ந்து உண்டான கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று, வெனிசுலாவில் உள்ள மற்றொரு சிறையில் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப் பட்டார்.
வெனிசுலாவில் ஆண்டுதோறும் சிறையில் நடக்கும் கலவரங்களில் மட்டும் சுமார் 500 கைதிகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள சிறைகளில் நிர்ணயிக்கப் பட்டதை விட அதிகமான கைதிகள் அடைக்கப் படுவதே எனச் சொல்லப் படுகிறது.
உதாரணமாக, சபானிடா சிறையில் சுமார் 4000 கைதிகள் உள்ளனர். இது, அச்சிறையின் கொள்ளளவை காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் ஆகும்.